support@techeditz2utnpsc.com | 8300-921-521

மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்
Samacheer Book Back Questions And Answers For வரலாறு Standard 6 Term 2 “மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும்”
I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
1. பௌத்த நூல்களின் பெயர் என்ன?
அ) அங்கங்கள்
ஆ) திரிபிடகங்கள்
ஆ) திருக்குறள்
ஈ) நாலடியார்
2. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார்?
அ) ரிஷபா
ஆ) பார்சவ
இ) வர்தமான
ஈ) புத்தர்
3. சமணத்தில் எத்தனை தீர்த்தங்கரர்கள் இருந்தனர்?
அ) 23
ஆ) 24
இ) 25
ஈ) 26
4. மூன்றாம் பௌத்தசபை எங்கு கூட்டப்பட்டது?
அ) ராஜகிரகம்
ஆ) வைசாலி
இ) பாடலிபுத்திரம்
ஈ) காஷ்மீர்
5. புத்தர் தனது முதல் போதனை உரையை எங்கு நிகழ்த்தினார்?
அ) லும்பினி
ஆ) சாரநாத்
இ) தட்சசீலம்
ஈ) புத்தகயா
II. கூற்றோடு காரணத்தைப் பொருத்துக /பொருத்தமான விடையை தேர்ந்தெடு:
1. கூற்று: ஒரு சாதாரண மனிதரால் உபநிடதங்களைப் புரிந்துகொள்ள இயலாது.
காரணம்: உபநிடதங்கள் மிகவும் தத்துவம் சார்ந்தவை.
அ) கூற்றும் அதன் காரணமும் சரியானவை.
ஆ) கூற்று தவறானது.
இ) கூற்று சரியானது. ஆனால் அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு.
2. கூற்று: ஜாதகங்கள் புகழ்பெற்ற கதைகளாகும்.
காரணம்: அஜந்தா குகையின் சுவர்களிலும் மேற்கூரையிலும் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் ஜாதகக் கதைகளை சித்தரிக்கின்றன.
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி.
ஆ) கூற்று தவறு.
இ) கூற்று சரி ஆனால் அதற்கான காரணம் தவறு.
ஈ) கூற்றும் அதற்கான காரணம் ஆகிய இரண்டும் தவறு.
3. சரியான விடையைக் கண்டறியவும்.
விகாரைகள் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன?
i. கல்வி கூடமாக
ii. பௌத்தத் துறவிகளின் தங்குமிடம்
iii. புனிதப் பயணிகள் தங்குவதற்காக
iv. வழிபாட்டுக் கூடம்
அ) ii சரி
ஆ) i மற்றும் iii சரி
இ) i, ii, iv ஆகியவை சரி
ஈ) i மற்றும் iv சரி
4. சமணமும் பௌத்தமும் உருவாவதற்கு கீழ்க்கண்ட கூற்றுகளைக் காரணமாக கருதலாமா?
1. வேள்விச்சடங்குகள் பெருஞ்செலவு மிக்கதாக இருந்தன.
2. மூடநம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் சாதாரண மனிதர்களை குழப்பமுறச் செய்தன. மேற்சொல்லப்பட்ட கூற்றில் / கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1 மற்றும் 2
ஈ) 1 மற்றும் 2ம் இல்லை
5. சமணம் குறித்த கீழ்க் கண்டவற்றுள் எது சரியானது?
அ) உலகை கடவுள் தோற்றுவித்தார் என்பதை சமணம் மறுக்கிறது.
ஆ) உலகைத் தோற்றுவித்தவர் கடவுள் என்பதை சமணம் ஒத்துக்கொள்கிறது.
இ) சமணத்தின் அடிப்படைத் தத்துவம் சிலை வழிபாடாகும்.
ஈ) இறுதித்தீர்ப்பு எனும் நம்பிக்கையைச் சமணம் ஒத்துக்கொள்கிறது.
6. பொருந்தாததை வட்டமிடு.
பார்சவா, மகாவீரர், புத்தர், ரிஷபர்
7. தவறான இணையைக் கண்டுபிடி.
அ) அகிம்சை – காயப்படுத்தாமல் இருத்தல்
ஆ) சத்யா – உண்மைபேசுதல்
இ) அஸ்தேய – திருடாமை
ஈ) பிரம்மச்சரியா – திருமணநிலை
8. சித்தார்த்த கௌதமர் குறித்து கீழே காண்பனவற்றுள் ஒன்றைத் தவிர மற்ற அனைத்தும் சரி.
அ) இந்து மதத்தை நிறுவியவர் அவரே.
ஆ) அவர் நேபாளத்தில் பிறந்தார்.
இ) அவர் நிர்வாணம் அடைந்தார்.
ஈ) அவர் சாக்கியமுனி என்று அறியப்பட்டார்.
III. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. மகாவீரரின் கோட்பாடு _____ என்று அழைக்கப்படுகிறது.
2. _____ என்பது துன்பங்களிலிருந்தும் மறுபிறவியிலிருந்தும் விடுதலை பெற்ற ஒரு நிலை.
3. பௌத்தத்தை நிறுவியவர் _____ ஆவார்.
4. காஞ்சிபுரத்திலுள்ள, திருப்பருத்திக்குன்றம் என்னும் கிராமம் ஒரு காலத்தில் _____ என்று அழைக்கப்பட்டது.
5. _____ என்பது புத்தரின் உடல் எச்சங்கள் மீது கட்டப்பட்டனவாகும்.
விடைகள்:
1. சமணம்
2. நிர்வாண நிலை
3. கௌதம புத்தர்
4. ஜைனக்காஞ்சி
5. ஸ்தூபி
IV. சரியா? தவறா?
1. புத்தர் கர்மாவை நம்பினார்.
2. புத்தருக்கு சாதி முறை மேல் நம்பிக்கை இருந்தது.
3. கௌதம சுவாமி, மகாவீரரின் போதனைகளைத் தொகுத்தார்.
4. விகாரைகள் என்பன கோவில்களாகும்.
5. அசோகர் பௌத்த மதத்தைப் பின்பற்றினார்.
விடைகள்:
1. சரி
2. தவறு
3. சரி
4. தவறு
5. சரி
V. பொருத்துக:
1. அங்கங்கள் அ. வர்தமானா
2. மகாவீரர் ஆ. துறவிகள்
3. புத்தர் இ. பௌத்தக் கோவில்கள்
4. கசத்யா ஈ. சாக்கியமுனி
5. பிட்சுக்கள் உ. சமண நூல்
விடைகள்:
1. உ
2. அ
3. ஈ
4. இ
5. ஆ
Visit Our YouTube Channel For More Free Videos: Click Here