குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை

Samacheer Book Back Questions And Answers For வரலாறு Standard 6 Term 2 “குடித்தலைமையில் இருந்து பேரரசு வரை”

I. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்:
1. நான்கு மகாஜனபதங்களில் மிகவும் வலிமையான அரசு எது?
அ) அங்கம்
ஆ) மகதம்
இ) கோசலம்
ஈ) வஜ்ஜி

2. கீழ்க்கண்டவர்களில் கௌதம புத்தரின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார்?
அ) அஜாதசத்ரு
ஆ) பிந்துசாரா
இ) பத்மநாப நந்தா
ஈ) பிரிகத்ரதா

3. கீழ்க்காண்பனவற்றில் எது மௌரியர் காலத்திற்கான சான்றுகளாகும்?
அ) அர்த்த சாஸ்திரம்
ஆ) இண்டிகா
இ) முத்ராராட்ஷம்
ஈ) இவை அனைத்தும்

4. சந்திரகுப்த மௌரியர் அரியணையைத் துறந்து _____ என்னும் சமணத் துறவியோடு சரவணபெலகோலாவுக்குச் சென்றார்.
அ) பத்ரபாகு
ஆ) ஸ்துலபாகு
இ) பார்ஸ்வ நாதா
ஈ) ரிஷபநாதா

5. செல்யூகஸ் நிகேட்டரின் தூதுவர் _____.
அ) டாலமி
ஆ) கொளடில்யர்
இ) ஜெர்சக்ஸ்
ஈ) மெகஸ்தனிஸ்

6. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?
அ) சந்திரகுப்த மௌரியர்
ஆ) அசோகர்
இ) பிரிகத்ரதா
ஈ) பிந்துசாரர்

ADVERTISEMENT

II. கூற்றைக் காரணத்துடன் பொருத்துக . சரியான விடையைத் தேர்ந்தெடு:
1. கூற்று: அசோகர் இந்தியாவின் மாபெரும் பேரரசர் என கருதப்படுகிறார்.
காரணம்: தர்மத்தின் கொள்கையின் படி அவர் ஆட்சி புரிந்தார்.
அ) கூற்று காரணம் ஆகிய இரண்டும் சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் காரணமும் உண்மையானவை, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

2. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் எது/எவை சரி.
கூற்று i: ஒட்டுமொத்த இந்தியாவை ஒரே ஆட்சியின் கீழ் இணைந்த முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர் ஆவார்.
கூற்று ii: மௌரியரின் நிர்வாகம் பற்றிய செய்திகளை அர்த்தசாஸ்திரம் வழங்குகிறது.
அ) i மட்டும்
ஆ) ii மட்டும்
இ) i, ii ஆகிய இரண்டும்
ஈ) iம் இல்லை iiம் இல்லை

3. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளை கவனமாக கவனி. அக்கூற்றுகளில் சரியானது எது/எவை எனக் கண்டுபிடி.
1. மகதத்தின் முதல் அரசர் சந்திரகுப்த மௌரியர்
2. ராஜகிரிகம் மகதத்தின் தலைநகராய் இருந்தது.
அ) 1 மட்டும்
ஆ) 2 மட்டும்
இ) 1, மற்றும் 2
ஈ) 1ம் இல்லை 2ம் இல்லை

4. கீழ்க்காண்பனவற்றை காலக்கோட்டின்படி வரிசைப்படுத்தவும்.
அ) நந்தா – சிசுநாகா – ஹரியங்கா – மெளரியா
ஆ) நந்தா – சிசுநாகா – மெளரியா – ஹரியங்கா
இ) ஹரியங்கா – சிசுநாகா – நந்தா – மௌரியா
ஈ) சிசுநாகா – மெளரியா – நந்தா – ஹரியங்கா

5. கீழ்க்கண்டவைகளில் எது மகதப் பேரரசின் எழுச்சிக்கு காரணமாயிற்று
i. முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம்
ii. அடர்ந்த காடுகள் மரங்களையும், யானைகளையும் வழங்கின.
iii. கடலின் மீதான ஆதிக்கம்
iv. வளமான இரும்புத்தாது கிடைத்தமையால்
அ) i, ii மற்றும் iii மட்டும்
ஆ) iii மற்றும் iv மட்டும்
இ) i, ii மற்றும் iv மட்டும்
ஈ) இவை அனைத்தும்

III. கோடிட்ட இடங்களை நிரப்புக:
1. _____ மகதத்தின் தொடக்ககாலத் தலைநகராக இருந்தது.
2.முத்ரராட்சசத்தை எழுதியவர் _____.
3. _____ பிந்துசாரரின் மகனாவார்.
4. மௌரியப் பேரரசை தோற்றுவித்தவர் _____
5. நாடு முழுவதிலும் தர்மத்தைப் பரப்புவதற்காக _____ பணியமர்த்தப்பட்டனர்.

ADVERTISEMENT

விடைகள்:
1. ராஜகிரகம்
2. விசாகதத்தர்
3. அசோகர்
4. சந்திகுப்த மௌரியர்
5. தர்ம – மகா மாத்திரர்கள்

IV. சரியா? தவறா?
1.தேவனாம்பியா எனும் பட்டம் சந்திரகுப்த மௌரியருக்கு வழங்கப்பட்டது.
2. அசோகர் கலிங்கப்போரில் தோல்வியடைந்த பின்னர் போரைக் கைவிட்டார்.
3. அசோகருடைய தம்மா பௌத்தக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டவை.
4. நமது காகிதப் பணத்தில் இடம் பெற்றுள்ள சிங்கங்கள் ராம்பூர்வா தூண்களின் காளை சிகரப் பகுதியிலிருந்து பெறப்பட்டவையாகும்.
5. புத்தரின் உடல் உறுப்புகளின் எச்சங்கள் ஸ்தூபியின் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.

விடைகள்:
1. தவறு
2. தவறு
3. சரி
4. தவறு
5. சரி

V. பொருத்துக:
1. கணா                              அ. அர்த்தசாஸ்திரம்
2. மெகஸ்தனிஸ்           ஆ. மதச் சுற்றுப்பயணம்
3. சாணக்கியா                இ. மக்கள்
4. தர்ம யாத்திரை          ஈ. இண்டிகா

விடைகள்:
1. இ
2. ஈ
3. அ
4. ஆ


Visit Our YouTube Channel For More Free Videos: Click Here

ADVERTISEMENT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Open chat
TNPSC Help
Hello
How can I help you?